சபரிமலை விவகாரத்தில் கருத்து தெரிவித்த விஜய் சேதுபதி...!

சபரிமலை விவகாரத்தில் கருத்து தெரிவித்த விஜய் சேதுபதி...!
சபரிமலை விவகாரத்தில் கருத்து தெரிவித்த விஜய் சேதுபதி...!
Published on

சபரிமலை விவகாரத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் முடிவுக்கு நடிகர் விஜய் சேதுபதி ஆதரவு தெரிவித்துள்ளார். அதேமசயம் விஜய் சேதுபதியின் பேச்சுக்கு எதிராகவும், ஆதரவாகவும் பலர் தங்களது கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து கேரளாவில் பல போராட்டங்கள் நடந்தன. பாஜக, காங்கிரஸ் கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தபோதும் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதில் தீவிரமாக இருந்தது. அதன்தொடர்ச்சியாக கேரளாவை சேர்ந்த கனகதுர்கா (44), பிந்து (42) ஆகிய இரண்டு பெண்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கேரளாவில் படப்பிடிப்பு ஒன்றில் கலந்துகொண்ட விஜய்சேதுபதி, சபரிமலை விவகாரத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் பேசும்போது, “ ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் காலத்தில் பெண்கள் கடுமையான வலியை தாங்கிக் கொள்கின்றனர். மாதவிடாய் ஏன் வருகிறது என்பதும் கூட நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஒரு ஆண் மகனாக இருப்பது எளிமையானது. ஆனால் பெண்ணாக வாழ்வது அப்படியல்ல. சபரிமலை விவகாரத்தில் கேரள முதலமைச்சர் சரியான முடிவையே எடுத்துள்ளார். இதில் ஏன் சச்சரவுகள் கிளம்புகின்றன என்பதுதான் தெரியவில்லை” என கூறியிருந்தார்.

இந்நிலையில் விஜய் சேதுபதியின் பேச்சுக்கு எதிராகவும், ஆதரவாகவும் பலர் தங்களது கருத்துகளை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். “சபரிமலை விவகாரத்தை பற்றி பேசுவதற்கு முன்பாக வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள். அத்துடன் மக்களின் மத நம்பிக்கையையும் உணருங்கள். கேரளாவில் வாழும் பெரும்பான்மையான மக்கள் சபரிமலை விவகாரத்தில் முதலமைச்சர் பினராயி விஜயனின் செயலை வெறுக்கின்றனர்” என எதிர்ப்புக் குரல் எழும்ப சிலர் விஜய் சேதுபதிக்கு ஆதரவாகவும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Courtesy: TheNewsMinute

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com