வரலட்சுமியின் ‘மாஸ்டர் பீஸ்’ முடிந்தது

வரலட்சுமியின் ‘மாஸ்டர் பீஸ்’ முடிந்தது
வரலட்சுமியின் ‘மாஸ்டர் பீஸ்’ முடிந்தது
Published on

வரலட்சுமி நடிக்கும் மலையாள படம் ‘மாஸ்டர் பீஸ்’-ன் ஷூட்டிங் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.

நடிகை வரலட்சுமி மலையாளத்தில் நடிகர் மம்முட்டியுடன் சேர்ந்து ‘மாஸ்டர் பீஸ்’ என்ற படத்தில் நடித்து வந்தார். இந்தப் படத்தில் இவருக்கு பவானி துர்கா ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் ஷூட்டிங் முடிந்து படம் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.

இந்நிலையில் வரலட்சுமி தனது ட்விட்டர் பக்கத்தில், அஜய் வாசுதேவ் இயக்கும் இந்தப் படத்தில் வேலை விளையாட்டாகவும் சிறப்பாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் உன்னி முகுந்தன், மக்புல் சல்மான் உடன் வேலை செய்ததையும் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படம் டிசம்பர் 21 அன்று திரைக்கு வர உள்ளதாகவும், அதற்காக தான் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் இறுதிநாள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com