பிறந்தநாளன்று குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் யோகி பாபு!

திரைப்பட காமெடி நடிகர் யோகி பாபு தனது பிறந்தநாளான நேற்று, திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடிகர் யோகி பாபு
திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடிகர் யோகி பாபுpt desk
Published on

செய்தியாளர்: பே.சுடலைமணி செல்வன்

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி திருக்கோயில். இந்த கோயிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்களும் இங்கு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடிகர் யோகி பாபு
திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடிகர் யோகி பாபுpt desk

இந்த நிலையில் நேற்று நடிகர் யோகிபாபு தனது பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத்துடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் சாமி தரிசனம் செய்ய சென்றார். அங்கு அவர் மூலவர், சண்முகர், வள்ளி தெய்வானை, தட்சிணாமூர்த்தி மற்றும் சத்ரூ சம்ஹார மூர்த்தி ஆகியோரை வணங்கினார். கோயிலில் தரிசனம் முடித்து விட்டு வெளியே வந்தபோது கோயில் தூய்மை பணியாளர்கள் கேட்டுகொண்டதற்கிணங்க அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் யோகிபாபு.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடிகர் யோகி பாபு
‘கூடிய கூட்டங்கள், தலையா கடல் அலையா?’ - திருச்செந்தூர் முருகனை காண படையெடுக்கும் திரைப்பிரபலங்கள்!

இதைத் தொடர்ந்து வெளியே வந்த அவர், பக்தர்கள் மற்றும் பொதுமக்களுடன் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார். கோயிலுக்கு வெளியே வந்து பேட்டரி காரில் சென்ற அவர், அந்த வழியாக சென்ற கோயில் தூய்மை பணியாளர்களை பார்த்ததும், பேட்டரி காரை நிறுத்தச் சொல்லி தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் அன்பளிப்பு வழங்கினார். அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com