'இளையராஜா 75': சென்னை வந்தது ஹங்கேரி சிம்பொனி இசைக்குழு!

'இளையராஜா 75': சென்னை வந்தது ஹங்கேரி சிம்பொனி இசைக்குழு!

'இளையராஜா 75': சென்னை வந்தது ஹங்கேரி சிம்பொனி இசைக்குழு!
Published on

’இளையராஜா 75’ இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, ஹங்கேரியில் உள்ள சிம்பொனி இசைக்குழு சென்னை வந்து சேர்ந்தது. 

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், ’இளையராஜா 75’ என்ற தலைப்பில் பிப்ரவரி 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ-வில் இசை நிகழ்ச்சி நடத்த முடிவு செய்துள்ளது. இந்நிகழ்ச்சிக்கு பல்வேறு மொழி சினிமா பிரபலங் களை அழைக்க தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. இந்த நிகழ்ச்சி மூலம் தயாரிப்பாளர் சங்கத்துக்கு ரூ.10 கோடி நிதி திரட்டவும் அதை நலிந்த தயாரிப்பாளர்களுக்கு வீடு கட்ட நிலம் வாங்கு வது உள்ளிட்ட நலத்திட்டங் களுக்குப் பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த நிகழ்ச்சிக்கு தடை கேட்டு தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட விஷால் தொடர்ந்து தன்னிச்சையாக செயல் பட்டு வருவதாகவும், அவர் பதவி ஏற்கும்போது ரூ.7 கோடியாக இருந்த வங்கி கையிருப்பு, தற்போது ரூ.50 லட்சமாக குறைந்துள்ளதாகவும், சங்க பணத்தை தன் வாக்கு வங்கிக்காக, விஷால் பயன்படுத்துவதாக வும் தெரிவித்திருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இளையராஜா நிகழ்ச்சிக்கான மொத்த வரவு செலவு கணக்கு அறிக்கை யை தாக்கல் செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்துக்கு உத்தரவிட்டது. பின்னர், சங்கத்தின் மீது தொடர்ந்து குற்றச் சாட்டுகள் வருவதால் வழக்கு முடியும் வரை இந்த நிகழ்ச்சியை ஏன் ஒத்தி வைக்கக் கூடாது? என்றும் கேள்வி எழுப்பியது. அப்போது தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், நிகழ்ச்சி நடத்துவதற்கான ஏற்பாடுகள் முடிந்து விட்டதால் நிகழ்ச்சியை நிறுத்த முடியாது என்று கூறினர்.

இந்நிலையில் நிகழ்ச்சியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்கிடையே, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஹங்கேரியை சேர்ந்த சிம்பொனி இசைக்குழு இன்று காலை சென்னை வந்தடைந்தது. அவர்கள் நாளை முதல் ஒத்திகையில் ஈடுபட உள்ளதாகத் தெரிகிறது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com