ரசிகர்களிடமிருந்து தப்பிக்க கேட் ஏறி குதித்த சூர்யா!

ரசிகர்களிடமிருந்து தப்பிக்க கேட் ஏறி குதித்த சூர்யா!
ரசிகர்களிடமிருந்து தப்பிக்க கேட் ஏறி குதித்த சூர்யா!
Published on

ஆந்திராவில் ரசிகர்களின் கூட்டத்தை சமாளிக்க முடியாமல், நடிகர் சூர்யா கேட் ஏறி குதித்து வெளியில் சென்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன. 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷணன் நடிப்பில் பொங்கல் விருந்தாக திரைக்கும் வந்த திரைப்படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. படம் வெளியாவதற்கு முன்பே, அனிருத் இசையில் வெளியான ’சொடக்கு’ பாடல் இணையத்தில் ட்ரெண்ட் அடித்தது. அதன் பின்பு வெளியான திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இந்தத் திரைப்படம் தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கிலும் ’கேங்’ என்ற பெயரில் வெளியாகி உள்ளது. தெலுங்கு ரசிகர்கள் மத்தியிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், தெலுங்கு ரசிகர்களுடன் திரைப்படத்தை நேரில் காண, நடிகர் சூர்யா ஆந்திரா விரைந்தார். ராஜாமுந்திரி பகுதியில் உள்ள திரையரங்கத்திற்கு சென்ற சூர்யாவை ரசிகர்கள் பார்த்து உற்சாகத்தில் கத்தினர். மேலும், கட்டுக்கடங்காத கூட்டம், சூர்யாவை சுற்றி வளைத்ததால், அவர் அங்கிருக்கும் கேட் ஒன்றை எறி குத்தி தப்பித்தார். அப்போது, அவரை விடாத தெலுங்கு ரசிகர்கள் சூர்யாவுடன் கைகுலுக்கி, புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். சினிமா காட்சிகளில் வருவது போல், சூர்யா கேட் ஏறி குதிக்கும் காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com