'என்ஜாய் எஞ்சாமி’ பாடலை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கிறேன்: சூர்யா வாழ்த்து

'என்ஜாய் எஞ்சாமி’ பாடலை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கிறேன்: சூர்யா வாழ்த்து
'என்ஜாய் எஞ்சாமி’ பாடலை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கிறேன்: சூர்யா வாழ்த்து
Published on

பாடகர்கள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு பாடியுள்ள 'என்ஜாய் எஞ்சாமி’ இண்டிபெண்டண்ட் பாடலை பிரபல நடிகர் சூர்யா பாராட்டியுள்ளார்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் இசையில், பாடகர்கள் தீ மற்றும் தெருக்குரல் ‘அறிவு’, ஆகியோர் இணைந்து பாடிய ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் யூடியூப்பில் வெளியானது. வித்தியாசமான இசையாலும், அதற்கேற்றார்போல் அமைக்கப்பட்ட காட்சிகளும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனைத்தொடர்ந்து செல்வராகவன், கார்த்திக் சுப்புராஜ், துல்கர் சல்மான் உள்ளிட்ட பல பிரபலங்களும் இந்த பாடல் குறித்து சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டனர். இந்த நிலையில் தற்போது நடிகர் சூர்யாவும் 'என்ஜாய் எஞ்சாமி’ பாடல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் பதிவிட்ட பதிவில், “ எனக்கு இந்தப்பாடல் பிடித்திருக்கிறது. காட்சிகள் அழகாக உள்ளன. பாடலை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கிறேன். தெருக்குரல் அறிவிற்கு எனது பாராட்டுகள். வழக்கம்போல் தீயின் குரல் மெய்மறக்கச் செய்து விடுகிறது. படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com