’அட்வைஸ் அடுத்தவங்களுக்கு மட்டுமல்ல...’ சொன்னதைச் செய்த சூர்யா-கார்த்தி!

’அட்வைஸ் அடுத்தவங்களுக்கு மட்டுமல்ல...’ சொன்னதைச் செய்த சூர்யா-கார்த்தி!
’அட்வைஸ் அடுத்தவங்களுக்கு மட்டுமல்ல...’ சொன்னதைச் செய்த சூர்யா-கார்த்தி!
Published on

’இந்த உலகத்துல ஓசியில கிடைக்கிறது, அட்வைஸ் மட்டும்தான்’ என்கிற டயலாக்கை எங்கும் கேட்டிருக்கலாம். ’அட்வைஸ்லாம், அடுத்தவங்களுக்குத்தான். அதை சொன்னவங்களே அதை கடைபிடிக்க மாட்டாங்க’ என்று சொல்வதும் உண்டு. ஆனால், தான் அடிக்கடி மேடையில் சொல்வதை சத்தமில்லாமல் செய்திருக்கிறார்கள் சூர்யா, கார்த்தி சகோதரர்கள்!

வருடத்துக்கு ஒரு முறை, ரசிகர்களைச் சந்திக்கும் சூர்யா, அவர்களுடன் பேசும்போதும் அகரம் பவுண்டேஷன் விழாவில் பேசும்போதும் அவர் ரசிகர்களுக்கு சொல்லும் வார்த்தை, ‘கட் அவுட், பேனர் வைக்கிறது மட்டும் உங்க வேலை இல்லை. உங்க அப்பா, அம்மாவை நல்லா கவனிச்சுக்குங்க. அவங் களை மகிழ்ச்சியா வச்சுக்கணும். குறிப்பா அவங்க வயசான பிறகு நல்லா வச்சுக்கோங்க’ என்பது! இதை யேதான் கார்த்தியும் சொல்லி வருவார். 

அப்பா சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோருக்குத் தனித்தனி வீடுகள் இருந்தாலும் இன்னும் கூட்டுக் குடும்பமாகவே வாழ்ந்து வருகிறார்கள், இவர்கள். குடும்பத்துக்கு அதிக அக்கறை காட்டும் இவர்களை, நினைத்து சக நடிகர்களே வியக்கிறார்கள் என்பது தனி கதை.

இதற்கிடையே, தாங்கள், அடிக்கடி ரசிகர்களுக்குச் சொல்லும் விஷயத்தை, அமைதியாக நிறைவேற்றி இருக்கிறார்கள் சூர்யாவும் கார்த்தியும். அதாவது அப்பா, அம்மாவுடன் ஐரோப்பா நாடுகளில் உள்ள, லண்டன், வெனிஸ், பாரிஸ், பிரான்ஸ் என 20 நாள் டூர் அடித்துவிட்டு வந்திருக்கிறார்கள். இதில் விஷயம் என்னவென்றால், இந்த டூரில் நடிகர் சிவகுமார் குடும்பம் மட்டுமே கலந்து கொண்டதுதான்.

அதாவது சிவகுமார், அவர் மனைவி, மகன்கள் சூர்யா, கார்த்தி, மகள் பிருந்தா. ஜோதிகாவோ, கார்த்தி மனைவியோ, அவர்கள் குழந்தைகளோ இல்லை என்பதுதான் இதன் சிறப்பு! இந்த டூர், ஒன்லி அப்பா, அம்மாவுக்காக என்கிறார்கள் சூர்யா தரப்பில்!

இவ்வளவு பிசி ஷெட்யூலுக்கு இடையிலும் 20 நாட்கள் அமைதியாக ஐரோப்பா சென்றுவிட்டுத் திரும்பி இருப்பது வேறு யாருக்கும் தெரியாது!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com