’பார்ட்டி’யில் இருந்து திரும்பினார் சத்யராஜ்

’பார்ட்டி’யில் இருந்து திரும்பினார் சத்யராஜ்
’பார்ட்டி’யில் இருந்து திரும்பினார் சத்யராஜ்
Published on

'சென்னை 28' 2-ம் பாகம் படத்தைத் தொடர்ந்து, வெங்கட்பிரபு இயக்கும் படம், ’பார்ட்டி’. சத்யராஜ், ஜெயராம், நாசர், சம்பத், ஜெய், சிவா, சந்திரன், ரம்யா கிருஷ்ணன், சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் உட்பட பலர் நடிக்கும் இந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிக்கிறார்.

ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார். பிரேம்ஜி இசை அமைக்கிறார்.  இந்தப் படத்தின் முழுக் கதையும் பிஜி தீவில் நடக்கிறது. இதற்காக படக்குழு, கடந்த ஒன்றரை மாதத்துக்கும் மேல் அங்கு தங்கி படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறது. இந்நிலையில் அங்கு 40 நாள் ஷூட்டிங்கை முடித்துக்கொண்டு சென்னை திரும்பியிருக்கிறார் சத்யராஜ். 

’இன்னும் இளமையாக இருக்கும் சத்யராஜ், தனது நடிப்பால் படக்குழுவை அசத்தி இருக்கிறார். அவர் நடிப்பையும் அர்ப்பணிப்பையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவரது நடிப்புக்கு உதாரணமாக சொல்லும் படங்களில் இனி, ’பார்ட்டி’யும் இருக்கும்’ என்றது படக்குழு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com