’நாடோடிகள் 2’-வுக்குப் பிறகு உருவாகிறது 'சுந்தரபாண்டியன் 2'

’நாடோடிகள் 2’-வுக்குப் பிறகு உருவாகிறது 'சுந்தரபாண்டியன் 2'
’நாடோடிகள் 2’-வுக்குப் பிறகு உருவாகிறது 'சுந்தரபாண்டியன் 2'
Published on

தமிழ் சினிமாவில் இரண்டாம் பாகம் சீசன் இப்போது. தொடர்ந்து இரண்டாம் பாகப் படங்கள் உருவாகி வருகின்றன. அந்த வரிசையில் ’சுந்தரபாண்டியன்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. 

சசிகுமார், லட்சுமிமேனன், விஜய் சேதுபதி, சூரி, இனிகோ பிரபாகரன் உட்பட பலர் நடித்து 2012 ஆம் ஆண்டு வெளியான படம், ‘சுந்தரபாண்டியன்’. எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியிருந்த இந்தப் படம் ஹிட்டானது. இதையடுத்து, 'இது கதிர்வேலன் காதல், 'சத்திரியன்' படங்களை இயக்கினார். இப்போது, அவர் ’சுந்தரபாண்டியன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கிறார்.

சசிகுமார், சமுத்திரக்கனி கூட்டணி 'நாடோடிகள் 2' படப்பிடிப்பை மதுரையில் இப்போது நடத்தி வருகிறது. இந்தப் படம் முடிந்ததும் 'சுந்தரபாண்டியன் 2' படத்தை இயக்க இருக்கிறார் பிரபாகரன். முதல் பாகத்தில் லட்சுமிமேனன் ஹீரோயினாக நடித்திருந்தார். இப்போது லேட்டஸ்ட் ஹீரோயினை சசிகுமாருக்கு ஜோடியாக்க உள்ளனர். 
இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com