நடிகர் சங்க தேர்தல் நாளில் எஸ்.வி.சேகரின் 'அல்வா' நாடகம்!

நடிகர் சங்க தேர்தல் நாளில் எஸ்.வி.சேகரின் 'அல்வா' நாடகம்!
நடிகர் சங்க தேர்தல் நாளில் எஸ்.வி.சேகரின் 'அல்வா' நாடகம்!
Published on

நடிகர் சங்கத் தேர்தல் வருகிற 23ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள அதே கல்லூரியில் நடிகர் எஸ்.வி.சேகரின், அல்வா நாடகம் நடைபெறும் என போஸ்டர் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல், சென்னை எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் வருகிற 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் விஷால் மற்றும் பாக்யராஜ் அணிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தல் நாளில் இருஅணிகள் இடையே தகராறு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறி, கல்லூரி நிர்வாகத்துக்கு பட்டினப்பாக்கம் காவல் ஆய்வாளர் கடிதம் எழுதியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தச் சூழ்நிலையில் அதே நாளில் காலை 10.30 மணிக்கு நடிகர் எஸ்வி சேகரின் அல்வா நாடகம் நடைபெறும் என போஸ்டர் வெளியாகி யுள்ளது. இதற்காக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடகத்துக்கான வாடகை முன்பதிவுத் தொகையாக எஸ்வி சேகரிடம் 10 ஆயிரம் ரூபாய் பெற்றதற்காக SSPL ச்சாரிடிஸ் என்ற பெயரில் ரசீதும் வெளியாகியுள்ளது. 

நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள அதேநாளில், அதே நேரத்தில் எஸ்வி சேகரின் அல்வா நாடகத்துக்கு முன்பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com