கேரளாவில் ஹேமா கமிட்டி புயல் | தமிழ்நாட்டிலும் சர்ச்சை; நடிகையை மேடையிலேயே வர்ணித்த தயாரிப்பாளர்!

நடிகையை பொதுமேடையில் வைத்து, காட்சிப் பொருளைப் போல் பார்த்து மூத்த திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் பாலியல் ரீதியாக வர்ணித்தது தற்போது சர்ச்சையாகி உள்ளது.

சென்னையில் 'P2 இருவர்' என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் கே. ராஜன், அந்தப் படத்தின் நடிகையை மேடையில் நிற்க வைத்து ஏற இறங்க பார்த்தார். பின்னர், அவரை அமரச் சொன்ன ராஜன், படத்தின் நடிகை குறித்து, பஞ்சாபி பலகாரம்... பார்த்தால் பசியாறும்... என்ற பாடல் வரியோடு ஒப்பிட்டார். மேலும், தனக்கு பசியெடுப்பதாக அவர் கூறியதும், அதைக் கேட்டு பலர் கைதட்டியதும் சர்ச்சையாகி வருகிறது.

கேரள திரையுலகமே, பாலியல் புகார் தொடர்பான ஹேமா கமிட்டி அறிக்கையால் நிலைகுலைந்துள்ள நேரத்தில், மூத்த தயாரிப்பாளர் ராஜனின் பேச்சு தற்போது இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com