ரூ.75 லட்சம் கேட்டு நடிகையை மிரட்டிய முன்னாள் காதலன்!

ரூ.75 லட்சம் கேட்டு நடிகையை மிரட்டிய முன்னாள் காதலன்!
ரூ.75 லட்சம் கேட்டு நடிகையை மிரட்டிய முன்னாள் காதலன்!
Published on

75 லட்ச ரூபாய் கொடுக்கவில்லை என்றால் தன்னுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை  சமூகவலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மலையாள நடிகையை மிரட்டியதை  அவரது முன்னாள் காதலன் ஒப்புக்கொண்டுள்ளார்.
மலையாள நடிகையான மைதிலி, படத்தயாரிப்பு நிர்வாகியாக  பணிபுரிந்து வந்த கிரண்குமார்   என்பவரை காதலித்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கிரண்குமார் ஏற்கெனவே திருமணம்  ஆனவர் என்பதை தெரிந்து கொண்ட மைதிலி, கிரண்குமாருடன் இருந்த தொடர்பை முறித்துக்  கொண்டுள்ளார். இந்நிலையில்,  கடந்த 2008ம் ஆண்டு முதல் மைதிலி தன்னுடன் நெருக்கமாக  இருந்த புகைப்படங்களை வெளியிடப்போவதாக கிரண்குமார் மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.  இதனை மைதிலி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ரூ.75 லட்சம் பணத்தை கொடுக்காவிட்டால்  தன்னுடன் நெருக்கமாக இருக்கும் படத்தை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என  மீண்டும் கிரண்குமார் மிரட்டியுள்ளார். சொன்னதுபோல் சில தினங்களுக்கு முன்  அந்தப்புகைப்படங்களை கிரண்குமார் வெளியிட்டு இருக்கிறார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த  மைதிலி கேரள காவல்துறையிடம் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட  கிரண்குமார் காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில், ’மைதிலியிடம் ரூ.75 லட்சம் பணம்  கேட்டேன். அவர் கொடுக்க மறுத்ததால் என்னுடன் அவர் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை  வெளியிட்டேன்’ எனத் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com