விஜய் குறித்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட நடிகர் பவன்

விஜய் குறித்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட நடிகர் பவன்
விஜய் குறித்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட நடிகர் பவன்
Published on

'குருவி' குறித்து பேசிய சர்ச்சைக்குரிய கருத்திற்கு விஜய்யிடம் பவன் மன்னிப்பு கேட்டுள்ளார்.


தனுஷின் நடிப்பில் வெளியான 'அசுரன்' படத்தின் 100 வது நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. அதில் இயக்குநர் வெற்றிமாறன், தனுஷ், தயாரிப்பாளர் தாணு எனப் பலரும் பங்கேற்றனர். இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த நடிகர் பவனும் கலந்து கொண்டார். அவர் நிகழ்ச்சியில் பேசும்போது விஜய்யின் 'குருவி' படம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை அவர் முன்வைத்தார்.

‘குருவி’ 150 நாள் விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டபோது அது எவ்வளவு உண்மை என எனக்குத் தெரியவில்லை என்று அவர் தெரிவித்தார். இவரது இந்தப் பேச்சு இடம் பெற்ற வீடியோ இணையதளத்தில் வைரலானது. சமூக ஊடகங்களில் விஜய்யின் ரசிகர்கள் பவனுக்கு எதிராக அவதூறாக பேசத் தொடங்கினர். இப்போது அவர் நடிகர் விஜய் மற்றும் 'குருவி' படக் குழுவினரிடம் தனது சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பவன் மன்னிப்பு கோரியுள்ளார்.


இதற்கு முன் வெற்றிமாறனின் 'வடசென்னை' படத்திலும் பவன் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். பிரபலமான சில மலையாள படங்களிலும் இவர் நடித்துள்ளார். 2008 இல் வெளியான விஜய்யின் 'குருவி' படத்தில் வில்லனாக பவன் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com