அஜித்தின் ’நேர்கொண்ட பார்வை’: இன்று முக்கிய அப்டேட்!

அஜித்தின் ’நேர்கொண்ட பார்வை’: இன்று முக்கிய அப்டேட்!
அஜித்தின் ’நேர்கொண்ட பார்வை’:  இன்று முக்கிய அப்டேட்!
Published on

அஜித்தின் ’நேர்கொண்ட பார்வை’ படத்தின் முக்கியமான அப்டேட் இன்று மாலை வெளியாக இருப்பதாக படக்குழு தெரிவித் துள்ளது. 

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், டாப்ஸி நடித்த இந்தி படமான, ‘பிங்க்’  ‘நேர்கொண்ட பார்வை’என்ற தலைப்பில் தமிழில் ரீமேக் ஆகிறது. அமிதாப் நடித்த வழக்கறிஞர் கேரக்டரில் அஜித்குமார் நடிக்கிறார். வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, டெல்லிகணேஷ் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இதை ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக் கும் இந்தப் படத்துக்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

இதன் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றது. சமீபத்தில் 'வானில் இருள்' என்ற பாடலின் பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டது. யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான அந்தப்பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.

பின்னர், காலம் என்ற மற்றொரு பாடலும் வெளியிடப்பட்டு வரவேற்ப்பை பெற்றுள்ள நிலையில், இந்தப் படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாக இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. அது என்ன அறிவிப்பு என்று அஜித் ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com