நடிகர் விஜய்யின் தந்தை மீது பண மோசடி புகார் !

நடிகர் விஜய்யின் தந்தை மீது பண மோசடி புகார் !
நடிகர் விஜய்யின் தந்தை மீது பண மோசடி புகார் !
Published on

நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் மீது சென்னை காவல் ஆணையர் அலுலகத்தில் பண மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி தயாரித்த டிராபிக் ராமசாமி திரைப்படம் ஓராண்டுக்கு முன் திரைக்கு வந்தது. இந்த படத்தின் தமிழ்நாட்டு ஒளிபரப்பு உரிமத்தை 3 கோடி ரூபாய்க்கு தருவதாகக் கூறி, கனடாவில் வசித்து வரும் பிரம்மானந்தம் சுப்பிரமணியன் என்பவரிடம் முன்பணமாக 21 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் ஒப்பந்தம் போட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் சில நாட்கள் கழித்து இந்த படத்தை எஸ்.ஏ.சந்திரசேகரே வெளியிட இருப்பதாகவும், அதனால் வாங்கிய பணத்தை திருப்பி தருவதாகவும் ஒப்பந்தத்தை ரத்து செய்ததாக தெரிகிறது. இதனையடுத்து பணத்தை திருப்பி தராமல் அலைக்கழிப்பதோடு, கொலை மிரட்டல் விடுவதாகவும் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது பிரம்மானந்தம் சுப்பிரமணியன் சார்பில் மணிமாறன் என்பவர் புகார் அளித்துள்ளார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மணிமாறன், “ எஸ்.ஏ சந்திரசேகரிடம் கேட்டபோது பணத்தை திருப்பி அளிக்க முடியாது எனக்கூறி எனக்கும் எனது நண்பரான பிரமானந்தம் சுப்பிரமணியத்திற்கும் கொலை மிரட்டல் விடுக்கிறார்."அரசாங்கத்தையே அலறவைப்பவர்கள் நாங்கள் என உனக்கு தெரியாதா?” எனக் கேட்பதாகவும் மணிமாறன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com