மெர்சல் பாடல் வரிகளில் புதிய டெக்னிக்

மெர்சல் பாடல் வரிகளில் புதிய டெக்னிக்
மெர்சல் பாடல் வரிகளில் புதிய டெக்னிக்
Published on

மெர்சல் பாடல் வரிகளில் புதிய டெக்னிக்கை கையாண்டுள்ளார் பாடலாசிரியர் விவேக். 

வளர்ந்து இளம் பாடலாசிரியர் விவேக். வாடி ராசாத்தி, மனிதி போன்ற வரிகளால் அதிகம் கவனிப்புக்கு உள்ளானவர். தற்சமயம் மெர்சல் படத்தின் எல்லா பாடல்களையும் அவர்தான் எழுதியிருக்கிறார். அந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள மயோன் பாடலில் முடியும் ஒவ்வொரு வரியின் கடைசி சொல்லை கவனித்து பார்த்தால் ஒரு பொருள் கிடைக்கிறது. கூட்டிப் படித்தால் ‘ரசிகனே தலைவன்’ என விடை வருகிறது. 
அதோடு மேல் வரியின் உள்ள ஒரு சொல்லையும் அடுத்தடுத்து வரும் வரிகளின் சொல்லையும் ஒன்று கூட்டி படித்தால் ’வலைதளம் உடைய வருவானே.. உலக சாதனை படைச்சு நடப்பான்’ என்று வருகிறது. இந்த சொற்கள் படி மெர்சல் வலைதளத்தில் வைரலாக உள்ளது. உலக சாதனை என்பது ட்ரெய்லர் அதிக லைக்ஸ்களை வாங்கி சாதனை படைத்தது. இந்த வரிகளை முன்கூடியே முடிவு செய்து எழுதி இருக்கும் கவிஞரின் ஆருடத்தை கண்டு விஜய் ரசிகர்கள் மெர்சலாகி உள்ளார்கள். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com