"வாழையடி சிறுகதை அருமை! எழுத்தாளர் சோ.தர்மனுக்கு நன்றி" தனது பாணியில் ரிப்ளை கொடுத்த மாரி செல்வராஜ்!

வாழை திரைப்பட கதையை, 10 ஆண்டுகளுக்கு முன்பே சிறுகதையாக எழுதியுள்ளதாக சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் தெரிவித்திருந்த நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜ் முகநூலில் அந்த சிறுகதையை பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் மாரி செல்வராஜ், எழுத்தாளர் சோ.தர்மன்
இயக்குநர் மாரி செல்வராஜ், எழுத்தாளர் சோ.தர்மன்pt web
Published on

வாழையடி சிறுகதைதான் வாழை - சோ.தர்மன்

வறுமையால் சின்னஞ்சிறார்கள் படும் துயரத்தையும், அவர்களின் வாழ்வியலையும் படமாக காட்சிப்படுத்தியுள்ள வாழை திரைப்படம், பலரது இதயத்தையும் கணக்க செய்து வருகிறது.

வாழை படம்
வாழை படம்புதிய தலைமுறை

இச்சூழலில், புதிய சர்ச்சையாக, தனது வாழையடி... சிறுகதைதான் வாழை திரைப்படம் என்கிறார் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ. தர்மன். வாழை திரைப்பட கதையை, 10 ஆண்டுகளுக்கு முன்பே சிறுகதையாக எழுதியுள்ளதாக சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் தெரிவித்திருந்தார்.

இயக்குநர் மாரி செல்வராஜ், எழுத்தாளர் சோ.தர்மன்
வாழை: “என்னுடைய கதை...10 ஆண்டுகளுக்கு முன்பே எழுதியுள்ளேன்” எழுத்தாளர் சோ.தர்மன்

10ஆண்டுகளுக்கு முன்பே கதை எழுதியது மகிழ்ச்சி

இது தொடர்பாக, எழுத்தாளர் சோ.தர்மன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், சினிமாவுக்கு வந்ததால் வாழை கதை தற்போது கொண்டாடப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்பே இந்த கதையை எழுதியதை நினைத்து தற்போது மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டுள்ள சோ.தர்மன், வாழை தன்னை வாழ வைக்கவில்லை எனவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார். வாழையடி என்ற தம்முடைய சிறுகதையை படமாக எடுக்க யாரும் தன்னிடம் அனுமதி கேட்கவில்லை என்றும் எழுத்தாளர் சோ. தர்மன் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

சோ. தர்மன்
சோ. தர்மன்pt web

பேட்டியில் அவர் பேசியதாவது, “என்னை சிலர் வாழை படம் பார்க்க சொன்னார்கள். ஏன் என கேட்டபோது, ‘உங்களது சிறுகதையை அப்படியே பயன்படுத்தி இருக்கிறார்’ என சொன்னார்கள். நான் குறிப்பிட்ட திரைப்படங்களை மட்டுமே பார்க்கக்கூடிய ஒரு ஆள். சரியென்று நேற்று திரைப்படம் பார்த்தேன். அது என்னுடைய வாழையடி... எனும் சிறுகதை. ஏன் வாழையடி என பெயர்வைத்து மூன்று புள்ளிகளை வைத்தேன் என்றால் வாழையடி வாழையாக குழந்தைகள் கஷ்டப்படுகிறார்கள் என்பதை குறிப்பிடத்தான் அப்படி பயன்படுத்தி இருந்தேன்.

இயக்குநர் மாரி செல்வராஜ், எழுத்தாளர் சோ.தர்மன்
“ஒரு சமூகத்தின் உயிர்வலி - வாழை” - மாரி செல்வராஜ் வீட்டுக்கே சென்று வாழ்த்திய திருமாவளவன் எம்.பி!

சோ.தர்மன் அவர்களுக்கு நன்றி

ஒரு பிரச்னையை, ஒரு சம்பவத்தை ஒரு வடிவமாக்கி இலக்கியமாக்கி சிறுகதையாக நாவல்களாக யார் ஒருவர் முதலில் அடையாளம் கொடுத்து புத்தமாக வெளியிட்டு பதிப்புரிமை வைத்திருக்கிறார்களோ, அவருக்குத்தான் அந்த உரிமை செல்லும்” எனத் தெரிவித்திருந்தார்.

மாரி செல்வராஜ் - வாழை
மாரி செல்வராஜ் - வாழைweb

இந்நிலையில் மாரி செல்வராஜ் தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வாழைக்காய் சுமை தூக்கும் தொழிலாளர்களை பற்றி எழுத்தாளர் சோ தர்மன் அவர்கள் வாழையடி என்கிற பெயரில் எழுதிய சிறுகதையை இப்போதுதான் வாசித்தேன். இதோ அந்த வாழையடி சிறுகதை. அவசியம் இந்த கதையை அனைவரும் வாசியுங்கள். . எழுத்தாளர் சோ. தர்மன் அவர்களுக்கு நன்றி” என தெரிவித்து கதைக்கான சுட்டியையும் தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இயக்குநர் மாரி செல்வராஜ், எழுத்தாளர் சோ.தர்மன்
வாழை திரைப்படம் | “மாரியின் மீது பெரும் அன்பு உண்டாகிறது..!” - நெகிழும் திரைப்பிரபலங்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com