தீலிப்பை விட்டு பிடித்தோம் - டிஜிபி லோக்நாத்பெக்ரா பேட்டி

தீலிப்பை விட்டு பிடித்தோம் - டிஜிபி லோக்நாத்பெக்ரா பேட்டி
தீலிப்பை விட்டு பிடித்தோம் - டிஜிபி லோக்நாத்பெக்ரா பேட்டி
Published on

நடிகை கடத்தல் வழக்கில் ஆதாரத்தை திரட்டுவதற்காக திலீப்பை விட்டு பிடித்தோம் என்று டி.ஜி.பி. லோக்நாத்பெக்ரா பேட்டியில் கூறியுள்ளார்.

கேரள போலீஸ் டி.ஜி.பி. யாக லோக்நாத் பெக்ரா பதவி ஏற்றபிறகு தான் நடிகை கடத்தல் வழக்கில் போலீசாரின் விசாரணை தீவிரமடைந்தது. நடிகர் திலீப்பும் போலீஸ் வலையில் சிக்கினார். இந்நிலையில் இந்த வழக்கு குறித்து டிஜிபி.லோகநாத்பெக்ரா அளித்த பேட்டியில்..

"நடிகை கடத்தல் வழக்கில் முதல்கட்ட விசாரணையிலேயே குற்றவாளிகள் யார் என்பதும், அவர்களை போலீசாரால் கைது செய்ய முடியும் என்பதை கண்டறிந்தோம். ஆனால் போலீஸ் எப்போதும் குற்றவாளிகளை விட்டுதான் பிடிக்கும். எந்த வழக்கிலும் ஆதாரம் என்பது மிகவும் முக்கியம். இந்த வழக்கிலும் வலுவான ஆதாரங்களை திரட்டுவதற்காக நாங்கள் தீவிர விசாரணை நடத்தினோம். ஆதாரங்கள் சிக்கிய பிறகு குற்றவாளியை கைது செய்தோம். 

இந்த வழக்கில் போலீசார் திறமையாக செயல்பட்டு வருகிறார்கள். ஓரிருநாளில் மற்ற குற்றவாளிகளும் போலீஸ் பிடியில் சிக்குவார்கள். இந்த வழக்கு தொடர்பான எல்லா தகவல்களையும் இப்போதே தெரிவிக்கமுடியாது. தேவை இல்லாத தகவல்களை வெளியிட முடியாது. அதே சமயம் குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என்பதை உறுதியாக கூறுகிறேன். இந்த வழக்கில் முக்கிய கட்டத்தை நெருங்கிவிட்டதால் எங்களிடம் உள்ள அனைத்து ஆதாரங்களையும் கோர்ட்டில் ஒப்படைப்போம்."

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com