“அஜித் என்னிடம் வெட்கப்பட்டார்” - வியப்பில் நடிகை வித்யாபாலன்  

“அஜித் என்னிடம் வெட்கப்பட்டார்” - வியப்பில் நடிகை வித்யாபாலன்  
“அஜித் என்னிடம் வெட்கப்பட்டார்” - வியப்பில் நடிகை வித்யாபாலன்  
Published on

பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்டுள்ள அஜித், மிக எளிமையாக இருந்ததை தன்னால் நம்பவே முடியவில்லை என பாலிவுட் நடிகை வித்யாபாலன் தெரிவித்துள்ளார்

இந்தி ‘பிங்க்’ திரைப்படம்  ‘நேர்கொண்ட பார்வை’என்ற தலைப்பில் தமிழில் ரீமேக் ஆகிறது. அமிதாப் நடித்த வழக்கறிஞர் கேரக்டரில் அஜித்குமார் நடித்துள்ளார். ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, டெல்லிகணேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இதில் பாலிவுட் நடிகை வித்யா பாலனும் நடித்துள்ளார். 

இதுவரை ரீமேக் படங்களிலேயே நடிக்காத வித்யா பாலன் ஒரு ரீமேக் திரைப்படம் மூலம் தமிழில் கால் பதிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் அனுபவம் குறித்தும் அஜித்துடன் நடித்தது குறித்தும் ‘தி இந்து’ நாளிதழுக்கு வித்யா பாலன் பேட்டியளித்துள்ளார். 

அதில் அஜித் குறித்த பல விஷயங்களை அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.  ''இந்தி படமான ‘பிங்க்’ திரைப்படத்தை பலர் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் அதற்கான வாய்ப்பாக அமையும். இந்தத் திரைப்படத்தில் அஜித் நடிக்க இருப்பதாக தெரியவந்ததும் நான் உற்சாகம் அடைந்தேன். முதல் தமிழ் திரைப்படத்தில் அஜித்துடன் நடிக்கிறேன் என்பதே, எனக்கு எல்லாம் சரியாக கிடைப்பதாக தோன்றியது'' என்று தெரிவித்தார்

அஜித் குறித்து பேசிய வித்யா பாலன், ''அதிக எண்ணிக்கையிலான ரசிகர்கள் கூட்டத்தைக் கொண்டுள்ள ஒரு நடிகர் என் முன்னால் மிகவும் எளிமையாக நடந்துகொண்டிருந்ததை என்னால் நம்பவே முடியவில்லை. நான் நடிப்பது அஜித் உடனா? அல்லது அஜித் மாதிரியான ஒரு ஆளுடனா என்ற சந்தேகம் கூட வந்தது. அஜித் அந்த அளவுக்கு எளிமையானவர். அவருடைய 'தல' என்ற ஒரு நிலையையும் அவரின் எளிமை குறித்தும் நான் அஜித்துடன் பேசினேன். அவர் வெட்கப்பட்டார்'' என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com