மகிழ்ச்சி மழையில் மடோனா செபாஸ்டின் 

மகிழ்ச்சி மழையில் மடோனா செபாஸ்டின் 
மகிழ்ச்சி மழையில் மடோனா செபாஸ்டின் 
Published on

இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் விக்ரம் பிரபு, மடோனா செபாஸ்டின் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளனர். இப்படத்திற்கு ‘வானம் கொட்டட்டும்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதை ‘படைவீரன்’படத்தை இயக்கிய தனா இயக்குகிறார். 

மடோனா செபாஸ்டினுக்கு தங்கையாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இப்படத்தில் கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்குப் பிறகு நடிகர் சரத்குமாரும், நடிகை ராதிகாவும் ஜோடியாக நடிக்க உள்ளனர். இவர்கள் இப்படத்தில் விக்ரம் பிரபுவிற்கு பெற்றோர்களாக நடிக்கின்றனர்.


 
‘96’, ‘சீதகாதி’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இதற்கு இசையமைக்கிறார். தமிழில்‘அபியும் நானும்’ கவுரவம் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவுசெய்த ப்ரீதா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் முதல் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற உள்ளது. இப்படம் தொடர்பாக நடிகை மடோனா செபாஸ்டின் இயக்குனர் மணி ரத்னத்தை நேற்று சந்தித்து பேசியுள்ளார். 

இந்நிலையில் மணி ரத்னத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை மடோனா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “எனது மகிழ்ச்சியை இந்தப் புகைபடம் பேசும். திகைப்பூட்டும் சினிமாவிற்கு பின்னால் இதயமும் மூளையுமாக செயல்படுபவர் மணிரத்னம்” என்று புகழ்ந்துள்ளார்.  


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com