”பத்திரிகையாளர்களுகு எதிரான அரசுகளின் நெருக்கடி கருத்துரிமை மீதான கோரத் தாக்குதல்”-சீமான்

”பத்திரிகையாளர்களுகு எதிரான அரசுகளின் நெருக்கடி கருத்துரிமை மீதான கோரத் தாக்குதல்”-சீமான்
”பத்திரிகையாளர்களுகு எதிரான அரசுகளின் நெருக்கடி கருத்துரிமை மீதான கோரத் தாக்குதல்”-சீமான்
Published on

தேசிய பத்திரிகை தினத்தையொட்டி நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்துகள் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

ஒவ்வொரு ஆண்டும் தேசிய பத்திரிகை நாள் நவம்பர் 16 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா இதே நாளில்தான் தோற்றுவிக்கப்பட்டது. தேசிய பத்திரிகை நாளையொட்டி பல தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துவரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”ஜனநாயகத்தைக் கட்டிக்காக்க பேரரணாய் களத்தில் நிற்கும் ஊடகவியலாளர்களின் பக்கம் நின்று அவர்தம் பணிகளைப் போற்றுவோம்.

மக்களாட்சிக்கோட்பாட்டினைக் காக்க பெரும்பணியாற்றும் ஊடகத்துறையை சேர்ந்த பெருமக்கள் யாவருக்கும் பத்திரிகையாளர் நாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். அண்மைக் காலங்களில் ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கெதிராக ஆளும் அரசுகள் கட்டவிழ்த்துவிடுகிற நெருக்கடிகளும் கருத்துரிமை மீதான கோரத்தாக்குதல்களும் இந்த நாட்டின் ஜனநாயகத் தன்மையையே கேள்விக்குள்ளாக்குகின்றன” என்று அறிக்கையில் கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com