பதிப்புரிமைச் சட்ட மீறலுக்காக நடிகை கங்கனா ரனாவத் மீது எஃப்.ஐ.ஆர்..!

பதிப்புரிமைச் சட்ட மீறலுக்காக நடிகை கங்கனா ரனாவத் மீது எஃப்.ஐ.ஆர்..!
பதிப்புரிமைச் சட்ட மீறலுக்காக நடிகை கங்கனா ரனாவத் மீது எஃப்.ஐ.ஆர்..!
Published on

நடிகை கங்கனா ரனாவத், அவரது சகோதரி ரங்கோலி சாண்டல், சகோதரர் அக்சத் ரனாவத் மற்றும் கமல் குமார் ஜெயின் ஆகியோர் மீது, போர்வீரர் இளவரசி டிட்டா ( டிட்டா, த வாரியர் ஆப் பிரின்சஸ்) என்ற திரைப்படத்தை அறிவித்ததாக கார் போலீசார் வெள்ளிக்கிழமை காப்பிரைட் சட்டப்படி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர்.

டிட்டாவின் வாழ்க்கை கதை தொடர்பான இந்த வழக்கில் புகார் அளித்தவர் எழுத்தாளர் ஆஷிஷ் கவுல் ஆவார். அவர்காஷ்மீரின் போர் வீரர் ராணி டிட்டாஎன்ற புத்தகத்தை எழுதியுள்ளார். கடந்த காலங்களில், இந்த கதை தொடர்பாக அவர் கங்கனா ரனாவத்தை அணுகியதாகவும், கதையின் சில பகுதிகளை அவருக்கு மின்னஞ்சல் செய்ததாகவும் கவுல் போலீசாரிடம் தெரிவித்தார். ஆனால் அவர் சமீபத்தில் "தனக்குத் தெரியாமல்" இந்த விஷயத்தில் ஒரு திரைப்படத்தை தயாரிப்பதாக அறிவித்தபோது அதிர்ச்சியடைந்ததாக அவர் மேலும் கூறினார். அவரது படம் கவுலின் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல என்று கங்கனா ரனாவத் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com