நடிகர் கலாபவன் மணி மரணத்திலும் திலீபுக்கு தொடர்பு... புதிய குற்றச்சாட்டு

நடிகர் கலாபவன் மணி மரணத்திலும் திலீபுக்கு தொடர்பு... புதிய குற்றச்சாட்டு
நடிகர் கலாபவன் மணி மரணத்திலும் திலீபுக்கு தொடர்பு... புதிய குற்றச்சாட்டு
Published on

நடிகர் கலாபவன் மணி மரணத்திலும் நடிகர் திலீபுக்கு தொடர்பிருக்கலாம் என்று புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 
நடிகை பாவனா கடத்தல் வழக்கில் சிக்கியிருக்கும் நடிகர் திலீப் மீது ஒவ்வொரு நாளும் புதிய குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன. அந்தவகையில், புதிய குற்றச்சாட்டாக கலாபவன் மணி மரணத்திலும் திலீபுக்கு தொடர்பிருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் மற்றும் இயக்குனர் பைஜூ கொட்டாரக்கரா ஆகியோர் கூறியிருக்கின்றனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கலாபவன்மணியின் சகோதரர் ஆர்.எல்.வி.ராமகிருஷ்ணன், தனது சகோதரர் மரணம் தொடர்பான விசாரணை சரியான திசையில் செல்லவில்லை என்றும், நடிகர் திலீபுக்கு இருக்கும் தொடர்புகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 
முன்னதாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் பைஜூ கொட்டாரக்கரா, கலாபவன்மணி மரணத்தில் நடிகர் திலீபுக்கு தொடர்பு இருப்பதாகவும், அதற்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக ஒரு பெண் தொலைபேசியில் தெரிவித்ததாகக் கூறியிருந்தார். கலாபவன் மணியின் மரணம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் மத்திய புலனாய்வு அமைப்பினர் (சிபிஐ), அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர். மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருந்த கலாபவன் மணி, கடந்த 2016ம் ஆண்டு மார்ச் 6ல் அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். நடிகை பாவனா கடத்தி, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் கைதாகியுள்ள நடிகர் திலீப்பை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.   

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com