அமிதாப் பச்சன் குரலில் வெளியான கொரோனா காலர் ட்யூனுக்கு தடை விதிக்க மறுப்பு!

அமிதாப் பச்சன் குரலில் வெளியான கொரோனா காலர் ட்யூனுக்கு தடை விதிக்க மறுப்பு!
அமிதாப் பச்சன் குரலில் வெளியான கொரோனா காலர் ட்யூனுக்கு தடை விதிக்க மறுப்பு!
Published on

நடிகர் அமிதாப் பச்சனின் கொரோனா விழிப்புணர்வு காலர் ட்யூனுக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியா பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்தது. அந்த வகையில் நடிகர் அமிதாப் பச்சன் குரலுடன் கூடிய காலர் டியூன் ஒன்றும் வெளியிடப்பட்டது. இருமல் சத்தத்துடன் தொடங்கும் அந்த காலர் டியூனில், இந்தியா மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமும் கொரோனா வைரஸை எதிர்த்து போராடுகிறது எனத் தொடங்கி, கொரோனா காலத்தில் பின்பற்ற வேண்டிய ஒழுங்குமுறைகளை அமிதாப் பச்சன் விவரிப்பார்.

இந்தக் காலர் டியூனை நிறுத்தக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் காலர் ட்யூனுக்கு எதிரான பொதுநல மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com