பவர் ஸ்டார் சீனிவாசன் மீது மோசடி பிரிவில் வழக்கு

பவர் ஸ்டார் சீனிவாசன் மீது மோசடி பிரிவில் வழக்கு
பவர் ஸ்டார் சீனிவாசன் மீது மோசடி பிரிவில் வழக்கு
Published on

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது புது வண்ணாரப்பேட்டை போலீசார் மோசடி பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புது வண்ணாரப்பேட்டை அன்னை இந்திராகாந்தி நகரைச் சேர்ந்தவர் தயாநிதி. இவர் வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், “ சினிமா வாய்ப்பு தேடி அலைந்தபோது, நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுடன் தொடர்பு ஏற்பட்டது. சினிமா ஆசையில் இருந்த எனக்கு வாய்ப்பு வாங்கி தருவதாக என்னிடம் உறுதி அளித்தார். அதற்காக ரூபாய் 4.16 லட்சத்தை பெற்றுக் கொண்டார். ஆனால் இன்றுவரை வாய்ப்பு வாங்கித் தரவில்லை. தொடர்பு கொள்ள முயற்சித்தாலோ, நேரில் பார்க்க சென்றாலோ முடியவில்லை. என்னிடம் அவர் மோசடி செய்தது இதன்மூலம் தெரியவந்துள்ளது. எனவே போலீசார் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.

இதுதொடர்பாக விசாரித்து வரும் புது வண்ணாரப்பேட்டை போலீசார் தற்போது பவர் ஸ்டார் சீனிவாசன் மீது மோசடி பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com