அருள்நிதிக்கு மீண்டும் ஜோடியானார் பிந்து மாதவி!

அருள்நிதிக்கு மீண்டும் ஜோடியானார் பிந்து மாதவி!
அருள்நிதிக்கு மீண்டும் ஜோடியானார் பிந்து மாதவி!
Published on

கரு.பழனியப்பன் இயக்கும் படம், ‘புகழேந்தி எனும் நான்’. அரசியல் படமான இதில், அருள்நிதி ஹீரோவாக நடிக்கிறார். ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இந்தப் படத்தில் அருள்நிதி ஜோடியாக பிந்து மாதவி ஒப்பந்தமாகியுள்ளார். 

இதுபற்றி பிந்து மாதவி கூறும்போது, "எனக்கு பல வாய்ப்புகள் வந்தாலும், சிறந்த கதைகளை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்கிறேன். நடிக்க வாய்ப்புள்ள கேரக்டராகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அப்படி சமீபத்தில் எனக்கு அமைந்த படம்தான் 'புகழேந்தி எனும் நான்'. இது அரசியல் சார்ந்த படம். என்றாலும் என் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கிறது. அருள்நிதியுடன் இணைந்து மீண்டும் நடிப்பது மகிழ்ச்சி. டிசம்பரில் தொடங்கும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்’ என்றார்.

சிம்புதேவன் இயக்கிய ’ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’ படத்தில் அருள்நிதி ஜோடியாக, ஏற்கனவே நடித்திருந்தார் பிந்து மாதவி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com