அஜித்தின் சண்டைக்காட்சி... சாட்சியாக மாறிய பாடலாசிரியர்!

அஜித்தின் சண்டைக்காட்சி... சாட்சியாக மாறிய பாடலாசிரியர்!
அஜித்தின்  சண்டைக்காட்சி... சாட்சியாக மாறிய பாடலாசிரியர்!
Published on


’நடிகர் அஜீத்தின் திறமையை நேரில் பார்த்து வியந்த சாட்சி நான்’ என கபிலன் வைரமுத்து
புகழ்ந்துள்ளார். 
விவேகம் படத்தின் திரைக்கதை எழுதியதில் கபிலன் வைரமுத்துவும் பணியாற்றியுள்ளார். அப்படத்தில் ’காதலாட’ பாடலையும் அவர் எழுதியுள்ளார். அஜீத்துடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்ட அவர், அனைவராலும் விரும்பப்படும் மிகப்பெரிய நட்சத்திரமான அஜித்துடன் பணியாற்றியது உற்சாகத்தை கொடுக்கிறது. அஜீத்தின் ஃபெர்பார்மன்ஸ், சண்டைக் காட்சிகளை ஷூட்டிங் நேரில் பார்த்து வியந்தேன். சண்டைக்காட்சிகளில் அவர் எடுக்கும் முயற்சிகள் வியக்க வைக்கின்றன. என்னால் நம்ப முடியாத அளவிற்கு அவர் உழைப்பைக் கொட்டி இருக்கிறார். அவருடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தது மறக்க முடியாத அனுபவம். அவர் மிக உயரத்தில் இருந்து சண்டைக்காட்சிக்காக குதித்தை நேரில் பார்த்து வியந்த சாட்சி நான். அவரது உழைப்பால் விவேகம் படம் சிறப்பாக வந்திருக்கிறது’ என்கிறார் கபிலன் வைரமுத்து.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com