‘ஒரு வரியில் சினிமாத்துறை வாழ்க்கை பற்றி’ - ரசிகர்களின் சரமாரி கேள்விகளுக்கு தமன்னா பதில்

‘ஒரு வரியில் சினிமாத்துறை வாழ்க்கை பற்றி’ - ரசிகர்களின் சரமாரி கேள்விகளுக்கு தமன்னா பதில்
‘ஒரு வரியில் சினிமாத்துறை வாழ்க்கை பற்றி’ - ரசிகர்களின் சரமாரி கேள்விகளுக்கு தமன்னா பதில்
Published on

ரசிகர்களின் கேள்விகளுக்கு நடிகை தமன்னா, அவரது ட்விட்டர் பக்கத்தில் நேரடியாக பதிலளித்து வருகிறார்.

நடிகை தமன்னா தமிழை விட இப்போது தெலுங்கு பட உலகில்தான் பிசியாக இருக்கிறார். இன்று ட்விட்டர் பக்கத்தில் அவர் தன்னிடம் கேட்ட விரும்பும் கேள்விகளை ரசிகர்கள் கேட்கலாம் எனக் கூறியிருந்தார். அப்படி கேள்வி எழுப்பும் ரசிகர்கள் #AskTamannaah என்ற ஹேஷ்டேக் போட்டு கேட்கும் படி கோரியிருந்தார். சரியாக இன்று மாலை 4 மணி முதல் பலரது கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்து வருகிறார்.

ஒருரசிகர் இந்த உலகத்திலேயே மிகவும் மதிக்கத்தக்க விஷயம் என்ன என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு தமன்னா, “ரொம்பவும் சப்ஜெக்டிவ் ஆன கேள்வி. இந்தக் கேள்விக்கான பதில் நபருக்கு தக்க மாறுபடும். என்னைப் பொறுத்தவரை இந்த உலகத்தில் மதிப்பு மிக்க விஷயம் என் குடும்பம்தான்” என்று கூறியுள்ளார்.

மேலும் ஒரு ரசிகர், நீங்கள் படித்த கல்லூரியில் நடந்த கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு என்ஜாய் செய்தீர்களா? எனக் கேட்டதற்கு, ‘அந்தக் கல்லூரியில் இருந்து வெளியே வந்து பத்தாண்டுகள் கழித்த பின்பும், அதைப் பற்றி நினைக்கும்போது அந்த நினைவுகளில் விழுந்து விடுகிறேன்’ என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் எனக்கு சமீபத்தில்தான் கல்யாணம் நடந்தது. உங்களின் ஆசிர்வாதம் வேண்டும் என்றதற்கு, அவரை வாழ்த்தியுள்ளார் தமன்னா.

ஒரு பெண் ரசிகை 10 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டா பக்கத்தில் பெற்றுள்ளீர்கள் அதைக் குறித்து உங்களின் கருத்தை சொல்ல வேண்டும் என்றதற்கு, ‘அனைவரின் அன்புக்கு என்னுடைய நன்றி’ என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒருவர், சமீபத்தில் ஒரு பேட்டியில் டேபிள் டென்னிஸ் உங்களது விருப்பமான விளையாட்டு எனக் கூறி இருந்தீர்கள். நீங்கள் ஏதாவது போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு பெற்றுள்ளீர்களா? எனக் கேட்டதற்கு, தமன்னா, ‘நான் ஹாபியாக விளையாடி இருக்கிறேன். ஆனால் முழுமையாக விளையாடியதில்லை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இன்னொரு கேள்விக்கு அவர் மிகவும் தன்னம்பிக்கையோடு பதிலளித்துள்ளார். ஒரு ரசிகை, தோல்வியை எவ்வாறு சமாளிப்பது? கனவுகளைத் தொடர விரும்பும் இளைஞர்களுக்கு நீங்கள் என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்த தமன்னா, ‘தோல்வி உங்களுக்கு இடையில் நிறுத்திக் கொள்ளவும் வெளிப்படுத்தவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. எனவே அது மீண்டும் புதியதாக மற்றும் அற்புதமான ஒன்றைத் தொடங்குவதற்கான அடிப்படையாக அமைகிறது” என்றும் தெரிவித்துள்ளார்.

ஒருவரியில் சினிமாத்துறை வாழ்க்கைப் பற்றி கூறுமாறு ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, சாகசம் என்று தமன்னா பதிலளித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com