OTTயில் தன் படம் ரிலீசாவதால் நடிகர் விஜய் சேதுபதி அப்செட் எனத் தகவல்

OTTயில் தன் படம் ரிலீசாவதால் நடிகர் விஜய் சேதுபதி அப்செட் எனத் தகவல்
OTTயில் தன் படம் ரிலீசாவதால் நடிகர் விஜய் சேதுபதி அப்செட் எனத் தகவல்
Published on

கொரோனா அச்சுறுத்தலினால் கடந்த சில மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள சூழலில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள க/பெ ரணசிங்கம் படம் OTTயில் ரிலீசாகும் என அந்த படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நடிகர் விஜய் சேதுபதி அப்செட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனாவினால் திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் நடிகை ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் OTTயில் வெளிவந்தது. தொடர்ந்து நடிகர் சூர்யா நடித்துள்ள ‘சூரரை போற்று’ திரைப்படமும் OTTயில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் படமும் OTTயில் வரும் அக்டோபர் 2ஆம் தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டது.

விஜய் சேதுபதி இந்த செய்தியை அறிந்தவுடன் அப்செட்டானது மட்டுமில்லாமல் இதற்கு திரையரங்க உரிமையாளர்களின் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கும் என்ற கவலையில் மூழ்கி இருப்பதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது விஜய் சேதுபதி ஜெய்பூரில் நடைபெற்று வரும் ஷூட்டிங்கில் பங்கேற்றுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com