ஒரே வாரத்தில் ரூ.50 கோடி ரூபாய் வசூல் செய்த ‘மாநாடு’

ஒரே வாரத்தில் ரூ.50 கோடி ரூபாய் வசூல் செய்த ‘மாநாடு’
ஒரே வாரத்தில் ரூ.50 கோடி ரூபாய் வசூல் செய்த ‘மாநாடு’
Published on

சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் வெளியான ஒரே வாரத்தில் ரூ.50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

’ஈஸ்வரன்’ படத்திற்குப் பிறகு நடிகர் சிம்பு இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ’மாநாடு’ படத்தில் நடித்துள்ளார். பல்வேறு தடைகளையும் நெருக்கடிகளையும் கடந்து ‘மாநாடு’ கடந்த 25 ஆம் தேதி வெளியானது. எஸ்.ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். விடுமுறை நாட்களில் வெளியாகாமல் ஒர்க்கிங் நாளில் வெளியாகியே படம் வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. வெற்றிப் படமாக அமைந்துள்ளதாக இதுவரை வெளியான விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், ’மாநாடு’ வெளியான ஒரே வாரத்தில் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ.25 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் உலகம் முழுக்க இதுவரை ரூ.50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, படம் வெளியான இரண்டே நாளில் ரூ. 14 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com