உடல்நிலை சீரானதை அடுத்து, தனி அறைக்கு மாற்றப்பட்டார் ரஜினிகாந்த்!

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்திற்கு ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளதா என மருத்துவர்கள் பரிசோதித்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த்முகநூல்
Published on

வயிற்று வலி, லேசான நெஞ்சுவலி காரணமாக நேற்று இரவு 10.30 மணியளவில் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வயிற்றுப்பகுதியில் லேசான வீக்கம் இருப்பதாக முதற்கட்ட சோதனையில் தெரியவந்தது. அவருக்கு நெஞ்சுவலியும் ஏற்பட்டதால் இதயத்துக்கு செல்லும் ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளதா என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்ட்விட்டர்

உணவு செரிமான பிரச்னை, சிறுநீரக பிரச்னை உள்ளதா என்றும் மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். இதற்கிடையில், நடிகர் ரஜினிகாந்த் விரைவில் நலம்பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அப்பதிவில், ”மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ரஜினிக்கு மூன்று பரிசோதனைகளும் மேற்கொண்டு அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டபின், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிவயிற்றில் ரத்த நாள நரம்பில் வீக்கம் ஏற்பட என்ன காரணம் கண்டறியப்பட்டது. அதுதொடர்பான சிகிச்சை ஒருமணி நேரம் அளிக்கப்பட்ட நிலையில், உடல்நிலை சீராக உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அவர் தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். நாளை ரஜினிகாந்த் வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ரஜினிகாந்துக்கு என்னென்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட்டது, அவருக்கு என்ன மாதிரியான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை ஒன்றும் வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com