”என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை” - நடிகர் நிவின்பாலி விளக்கம்!

நடிகர் நிவின் பாலி பட வாய்ப்பு வழங்குவதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் கேரள போலீசார் ஜாமீனில் வெளிவரமுடியாதபடி வழக்கு பதிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிவின் பாலி
நிவின் பாலிweb
Published on

சமீபத்தில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கையானது மலையாள திரையுலகில் மிகப்பெரிய புயலையே கிளப்பியுள்ளது. நடிகைகள் பட வாய்ப்புக்காக, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள் என்பது உள்ளிட்ட பல புகார்களை விசாரிக்க அமைக்கப்பட்ட ஹேமா கமிட்டி, அதில் உண்மை இருப்பதாகவும் பெரும்பாலான நடிகர்கள் அத்தகைய செயல்களில் ஈடுபட்டிருப்பதாகவும் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஹேமா கமிட்டி
ஹேமா கமிட்டி

இந்த விவகாரம் நாளுக்கு நாள் சூடுபிடித்துவரும் நிலையில், ஏற்கனவே 9 பெண்களுக்கு மேலாக பாலியல் குற்றச்சாட்டுகளின் பேரில், நடிகர்கள் சித்திக், ஜெயசூர்யா, இயக்குனர் ரஞ்சித் உள்ளிட்டோர் மீது பாலியல் வழக்கு பதியப்பட்டுள்ளன.

நிவின் பாலி
நிவின் பாலி

இந்நிலையில் கேரளா சினிமாத்துறை பாலியல் குற்றச்சாட்டுகளின் அடுத்த புகாராக, நடிகர் நிவின்பாலி ஒரு பெண்ணுக்கு சினிமா வாய்ப்பு வழங்க உதவுவதாக கூறி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் பாலியல் வழக்கு பதிவுசெய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிவின் பாலி
உச்சம் பெறும் கேரள சினிமா பாலியல் குற்றச்சாட்டுகள்.. நடிகர் நிவின்பாலி மீது பாலியல் வழக்குப்பதிவு!

பட வாய்ப்பு வழங்குவதாக பாலியல் துன்புறுத்தல்..

நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து வெளியாகியிருக்கும் தகவலின் படி, 2023-ம் ஆண்டு பட வாய்ப்பு வழங்குவதாக கூறி துபாய் அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப் பதியப்பட்டுள்ளது.

நிவின் பாலி
நிவின் பாலி

அறிக்கைகளின் படி புகாரளித்திருக்கும் பெண், திரைப்படத்தில் தன்னை நடிக்க வைப்பதாக கூறி நடிகர் நிவின் பாலி துபாய்க்கு அழைத்து சென்று, 2023 நவம்பரில் பாலியல் வன்கொடுமை செய்ததாக எர்ணாகுளத்தில் பெண் புகார் அளித்துள்ளார். நிவின் பாலி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் உட்பட ஆறு பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், இந்த குற்றத்தில் நிவின் ஆறாவது குற்றவாளி எனவும் கூறப்படுகிறது. எர்ணாகுளத்தில் உள்ள ஊன்னுக்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிவின் பாலி
“அவர்கள் எவ்வளவு கோழைத்தனமானவர்கள்” ராஜினாமா செய்த மோகன்லால் உள்ளிட்டோரை காட்டமாக விமர்சித்த பார்வதி

குற்றச்சாட்டுக்கு பதிலளித்த நிவின் பாலி..

பாலியல் வழக்கு பதியப்பட்டதாக செய்திகள் வெளியானதை தொடர்ந்து நிவின் பாலி தன்மீதான குற்றாச்சாட்டு குறித்து பதிலளித்துள்ளார்.

நிவின் பாலி
நிவின் பாலி

அதுகுறித்து பேசியிருக்கும் அவர், “ஒரு பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு நான் ஆளாக்கியதாக தவறான செய்திகள் வெளியாகியுள்ளதை கண்டேன். அது முற்றிலும் உண்மைக்கு மாறானது. அந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்று நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்வேன். அதற்கு உரிய சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பேன்” என்று கூறியுள்ளார்.

நிவின் பாலி மீதான குற்றச்சாட்டும் உடனடியாக அதற்கு அவர் கொடுத்துள்ள பதிலும் மல்லுவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

நிவின் பாலி
’குத்தி குத்தி கிழிச்சாங்க; இன்னும் அழுதிட்டே இருக்கன்’-ஆயிரத்தில் ஒருவன் குறித்து செல்வராகவன் வேதனை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com