ஐஸ்வர்யா ராய் மீது காதல் வந்தது எப்படி..?: மனம் திறந்த அபிஷேக் பச்சன்..!

ஐஸ்வர்யா ராய் மீது காதல் வந்தது எப்படி..?: மனம் திறந்த அபிஷேக் பச்சன்..!
ஐஸ்வர்யா ராய் மீது காதல் வந்தது எப்படி..?: மனம் திறந்த அபிஷேக் பச்சன்..!
Published on

ஐஸ்வர்யா ராய்க்கும் தனக்கும் எந்த இடத்தில் காதல் மலர்ந்தது என அபிஷேக் பச்சன் மனம் திறந்து பேசியுள்ளார்.

பாலிவுட்டில் அனைவரும் கண் வைக்கும் அளவிற்கு கச்சிதமாக வலம் வரும் ஜோடி அபிஷேக் பச்சன்- ஐஸ்வர்யா ராய் தம்பதி. சினிமா துறையில் இருவரும் கொடிகட்டி பறக்கின்றனர். அதேநேரத்தில் சிறந்த கணவன்-மனைவியாக வாழ்ந்து நாளுக்கு நாள் தங்களது காதலையும் வளர்த்துக் கொள்கின்றனர். இவர்களுக்கு கடந்த 2007-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் ஆராத்யா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ஐஸ்வர்யா ராய்கும் தனக்கும் எந்த இடத்தில் காதல் மலர்ந்து என்பதை அபிஷேக் பச்சன் மனம் திறந்து பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “என் தொடக்க காலத்தில் ஐஸ்வர்யா ராயுடன் சேர்ந்து நடித்தேன். அப்போது ஒருவருக்கொருவர் நன்றாக பேசிக்கொள்வோம். அதனால் ஒருவரைபற்றி இன்னொருவர் நன்றாக தெரிந்து கொண்டோம். எனவே எங்களுக்குள் நல்ல நட்பு இருந்தது. அது நாளடைவில் தொடரவும் செய்தது. பின்னர் நட்பும் நாளுக்கு நாள் அதிக அன்பாகி நெருக்கமான நண்பர்கள் ஆனோம்.

பின்னர் ‘உம்ரோ ஜான்’ திரைப்படத்தில் இருவரும் ஒன்றாக நடித்தபோது எனக்கு காதல் இருப்பதாக தோன்றியது. அதன்பின் என் காதலை அவரிடம் தெரிவித்தேன். அவரும் ஏற்றுக்கொண்டார். காதல் திருமணத்தில் முடிந்து இப்போது எங்கள் வாழ்க்கை சிறப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. எங்கள் அன்பின் வெளிப்பாட்டில் அழகிய ஆராத்யா  எங்களுக்கு மகளாக உள்ளார்.

குழந்தையை பார்த்துக் கொள்ளும் அம்மாவாக இருந்தாலும் சரி.. ஒரு நடிகையாக இருந்தாலும் சரி எந்தவேலையையும் மிக  பொறுப்புடன் செய்யக் கூடியவர் ஐஸ்வர்யா ராய். என் மனைவி எனக்கு கற்றுத் தருகிறார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரும் நல்ல முறையில் அன்பை பகிர்ந்து கொள்கிறோம். இந்த வாழ்க்கை இனிமையாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com