“திருமண பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்ற முடிவு அவராகவே எடுத்த முடிவு” - ஆர்த்தி ரவி அறிக்கை!

நடிகர் ஜெயம்ரவி தனது மனைவி ஆர்த்தியுடனான திருமண பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், இந்த முடிவு முழுக்க முழுக்க ஜெயம்ரவி எடுத்த முடிவுதான் என்று ஆர்த்தி ரவி தற்போது அறிக்கை ஒன்றினை தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்...
ஆர்த்தி ரவி - அறிக்கை
ஆர்த்தி ரவி - அறிக்கைஇன்ஸ்டாகிராம்
Published on

தமிழ் திரையுலகில் ஜெயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ரவி. இவருக்கும், ஆர்த்திக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணமானது. தற்போது, இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில்தான், 18 வருடங்களுக்கு மேலான தங்களின் திருமண வாழ்விலிருந்து விலகுவதாக, கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி (நேற்று முன்தினம்) நடிகர் ஜெயம்ரவி தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

ஜெயம் ரவி வெளியிட்ட அறிக்கை
ஜெயம் ரவி வெளியிட்ட அறிக்கை

அதில், “ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும், எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

ஆர்த்தி ரவி - அறிக்கை
”ஆர்த்தி உடனான திருமண வாழ்விலிருந்து விலகுகிறேன்; இது எளிதில் எடுத்த முடிவல்ல”- ஜெயம் ரவி அறிவிப்பு

இருப்பினும் இதுபற்றி ஆர்த்தி எந்தப் பதிவும் வெளியிடவில்லை. இந்நிலையில் ஜெயம் ரவி அறிவித்து சரியாக ஒருநாள் கழித்து, இன்று ஆர்த்தி பரபரப்பு அறிக்கை ஒன்றை தன் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அதில் “திருமண பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்ற இந்த முடிவு முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தைச் சார்ந்து அவராகவே (ஜெயம் ரவியை குறிப்பிட்டு) எடுத்த முடிவே தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல... ” என்ற அதிர்ச்சிகரமான விஷயத்தை ஆர்த்தி ரவி தெரிவித்துள்ளார்.

மேலும் தன் அறிக்கையில் ஆர்த்தி, “சமீபத்தில் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் எங்கள் திருமண வாழ்க்கை குறித்து வெளியான அறிக்கையை பார்த்து நான் கவலையும் மன வேதனையும் அடைந்தேன். இது முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையுடன் கடந்த 18 வருடங்களாக நான் வாழ்ந்த வாழ்க்கை இந்த அறிக்கையின் மூலம் அதற்குரிய கௌரவம், கண்ணியம் மற்றும் தனித்தன்மையை இழந்து விட்டதாக நான் உணர்கிறேன்.

என் கணவரிடம் மனம் விட்டு பேச, என் கணவரை சந்திக்க வேண்டும் என நான் சமீபகாலமாக பலவித முயற்சிகள் செய்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டது. நானும் என் இரண்டு குழந்தைகளும் எதுவும் புரியாமல் தவித்து கொண்டிருக்கிறோம்.

திருமண பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்ற இந்த முடிவு முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தைச் சார்ந்து அவராகவே எடுத்த முடிவே தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல... ஆழ்ந்த மன வேதனையில் இருக்கின்ற நிலையிலும் நான் பொதுவெளியில் இது குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்க்கவே இப்போதும் விரும்புகிறேன்.

ஆனால் என் மீது குற்றம் சாட்டியும் என் நடத்தையின் மீது களங்கம் கற்பிக்கும் வகையிலும் பொதுவெளியில் மறைமுகமாக நடத்தப்படும் தாக்குதல்களை மிகுந்த சிரமத்துடன் எதிர்கொள்ள வேண்டி உள்ளது. ஒரு தாயாக எனக்கு எப்பொழுதும் என் குழந்தைகளின் நலனும், எதிர்காலமுமே முதல் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என் குழந்தைகளை காயப்படுத்துவதை என்னால் அனுமதிக்க இயலாது.

ஆர்த்தி ரவி
ஆர்த்தி ரவி

மறுக்கப்படாத பொய்கள் காலப்போக்கில் உண்மையாக நம்பப்படும் என்பதால் இவற்றை மறுப்பதும் என் முதல் கடமையாகிறது. தற்போது இந்த கடினமான காலகட்டத்தில் என் குழந்தைகளுக்கு தேவைப்படும் தைரியத்தையும், மனோதிடத்தையும் அவர்களுடன் ஒருத்தியாக நின்று அவர்களுக்கு வழங்குவதே என் தலையாய கடமை, காலம் நடந்த உண்மைகளை எந்த பாரபட்சமும் இன்றி உணர்த்தும் என்பதை முழுமையாக நம்புகிறேன். இந்த கடின காலத்தை நானும் என் குழந்தைகளும் கடக்கும் வரை எங்கள் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஆர்த்தி ரவி - அறிக்கை
BOX OFFICE-ஐ அதிரவைத்த ‘The GOAT'... 4 நாட்களில் இத்தனை கோடி வசூலா? விஜய் செய்த சம்பவம்!

இத்தனை காலமாக எங்களுக்கு ஆதரவு மட்டுமன்றி நல்வழி காட்டி வரும் பத்திரிக்கை ஊடக மற்றும் ரசிகப் பெருமக்களுக்கு என் மனமார்ந்த நன்றி. உங்கள் அன்பும் ஆதரவும் மட்டுமே என்னையும் என் குழந்தைகளையும் இந்த காலகட்டத்தில் தூணாக காத்து நிற்கும். இந்த சோதனையில் இருந்து நாங்கள் மீண்டு வர உங்கள் பிரார்த்தனைகள் துணை நிற்க வேண்டும் என்று உங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com