சினிமா
”ரூ.1 கோடி கட்டணும்” - ’தங்கலான்’ ரிலீஸ் ஆவதில் சிக்கலா? உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன?
ஞானவேல் ராஜாவை திவாலானவராக அறிவிக்க கோரி உயர் நீதிமன்ற தொடரப்பட்ட வழக்கு ஆகஸ்ட் 14க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
நடிகர் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தை வெளியிடும் முன் ஒரு கோடி ரூபாயை டிபாசிட் செய்ய வேண்டும் என பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், கங்குவா படத்தை வெளியிடும் முன்பும் ரூ.1 கோடி டிபாசிட் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பணம் டிபாசிட் செய்தது குறித்து உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து ஒப்புதல் பெறவும் உத்தரவு.
அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் பெற்ற கடனை திருப்பி செலுத்தாததால் ஞானவேல் ராஜாவை திவாலானவராக அறிவிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு ஆகஸ்ட் 14க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.