‘மக்கள் தலைவனே; நாளைய முதல்வனே’ -விஜய்க்காக மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்

‘மக்கள் தலைவனே; நாளைய முதல்வனே’ -விஜய்க்காக மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்
‘மக்கள் தலைவனே; நாளைய முதல்வனே’ -விஜய்க்காக மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்
Published on

நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி மதுரையில் விஜய் ரசிகர்கள் அவரை புகழ்ந்து போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

தமிழ் திரையுலகில் பெருமளவு ரசிகர்களை கொண்ட நடிகர்களில் ஒருவர் விஜய். வருடம் தோறும் ஜூன் 22-ஆம் தேதி இவரது பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு கொரோனா தொற்று பரவி வருவதால், நடிகர் விஜய் அவரது பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் அவரது கோரிக்கையையும் மீறி மதுரையில் சில இடங்களில் அவரது ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

குறிப்பாக சிவாஜி, கமலுக்கு அடுத்தப்படியாக திரையுலகின் மூன்றாவது தமிழ் வாரிசு எனவும், தமிழகத்தை காக்க வரும் தன்னலமற்ற தலைவன், மக்கள் தலைவன் நாளைய முதல்வன் என விஜய்யை புகழ்ந்து அவரது ரசிகர்களும், ஆதரவாளர்களும் நகரின் பல பகுதிகளில் ஒட்டியுள்ள போஸ்டர்களால் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com