சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்:’ சீரியல் நடிகர் போக்சோவில் கைது

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்:’ சீரியல் நடிகர் போக்சோவில் கைது
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்:’ சீரியல் நடிகர் போக்சோவில் கைது
Published on

சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த புகாரில் சீரியல் நடிகர் பேர்ல் வி புரி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியில் மிகவும் பிரலபலான தொடர் ’நாகின்’ சீரியல். இந்தியா முழுக்க ஹிட் அடித்ததால் தமிழில் ‘நாகினி’ என டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பானது. தமிழிலும் ஹிட் அடித்ததால் ‘நாகினி 2’, ‘நாகினி 3’ என இதன் அடுத்தடுத்தப் பாகங்களை டப்பிங் செய்து வெளியிட்டார்கள். தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘நாகினி 3’ சீரியலில் ஹீரோவாக பேர்ல் வி புரி நடித்துள்ளார். தன்னிடம் பழகுவது பாம்பு என்று தெரியாமல் பாம்பை திருமணம் செய்துகொள்ளும் அப்பாவியாய் நடித்து கவனம் ஈர்த்தார்.

இந்தியில் ‘நாகின் 3’ மட்டுமல்லாமல் நிறைய சீரியல்களில் நடித்துள்ள பேர்ல் வி புரி 17 வயது சிறுமி ஒருவர் அளித்த புகாரின் பேரில் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார். சீரியலில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவாதாகக் கூறி சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளதாக அந்த சிறுமி குற்றம்சாட்டியுள்ளார்.

தற்போது, சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் பேர்ல் வி புரி மற்றும் அவருடைய நண்பர்கள் என மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பாலியல் வன்புணர்வு மற்றும் பாலியல் வன்கொடுமை என இரண்டு வழக்குகள் பதியப்பட்டு போக்சோ சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com