''உங்களுடன் செலவிட்ட ஒவ்வொரு தருணமும் இனிமையானவை!''- ஆசிரியர் மரணம் குறித்து அமீர்கான்

''உங்களுடன் செலவிட்ட ஒவ்வொரு தருணமும் இனிமையானவை!''- ஆசிரியர் மரணம் குறித்து அமீர்கான்

''உங்களுடன் செலவிட்ட ஒவ்வொரு தருணமும் இனிமையானவை!''- ஆசிரியர் மரணம் குறித்து அமீர்கான்
Published on

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் மற்ற நடிகர்களைப்போல் சமூக ஊடகங்களில் ஆக்டிவ்வாக இருப்பதில்லை. இருந்தாலும், சமீபத்தில் மறைந்த அவரது மராத்தி ஆசிரியரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அமீர் தனது டிவிட்டர் பக்கத்தில், ’’மராத்தி ஆசிரியர் சுஹாஸ் லிமாயே காலமான செய்தி எனக்கு மிகுந்த வருத்தமளிக்கிறது. எனக்கு கிடைத்த சிறந்த ஆசிரியர்களில் ஒருவர். உங்களுடன் செலவிட்ட ஒவ்வொருத் தருணமும் இனிமையானவை. உங்களுடைய கற்றுக்கொள்ளும், பகிர்ந்துகொள்ளும் ஆர்வம் உங்களை ஒரு சிறந்த ஆசிரியராக எடுத்துக்காட்டியது. உங்களுடன் செலவிட்ட 4 வருடங்களும் மறக்கமுடியாதவை. நாம் ஒன்றாக செலவிட்ட ஒவ்வொரு தருணமும் என் நினைவில் இருக்கிறது. மராத்தி மட்டுமல்ல, உங்களிடமிருந்து பல நல்ல விஷயங்களையும் கற்றுக்கொண்டேன். உங்கள் குடும்பத்தினருக்கு மனமார்ந்த இரங்கல்கள்’’ என்று பதிவிட்டுள்ளார்.

ஆசிரியர் சுஹால் லிமாயே பற்றி நடிகர் லால் சிங் சத்தாவும் ஒரு குறிப்பை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் ஆசிரியரின் மறைவுக்கு வருத்தம் தெரிவித்ததோடு, மொழியை மட்டுமல்ல, அவரிடமிருந்து கற்றுக்கொள்ள பல நல்ல விஷயங்கள் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் அவரது குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com