Prakash J
ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக இருக்க, அம்சத் பாஷா ஷேக் பேபாரி, புடி முத்தால நாயுடு, கே.நாராயண சுவாமி, கோட்டு சத்தியநாராயணா, ராஜன்னா டோரா பீடிகா ஆகிய 5 பேர் துணை முதல்வர்களாக உள்ளனர்.
பாஜகவைச் சேர்ந்த பெமா காண்டு முதல்வராக இருக்கும் நிலையில், செளனா மெயின் துணை முதல்வராக உள்ளார்.
ஜனதா தளத்தைச் சேர்ந்த நிதிஷ்குமார் முதல்வராகப் பதவியில் இருக்கும் நிலையில், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக உள்ளார்.
பாஜவைச் சேர்ந்த மனோகர் லால் கட்டார் முதல்வராய் அங்கம் வகிக்க, துஷ்யந்த் செள்தலா துணை முதல்வராக உள்ளார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுக்விந்தர் சிங் சுகு முதல்வராக உள்ள நிலையில், துணை முதல்வராக முகேஷ் அக்னிஹோத்ரி உள்ளார்.
சிவசேனாவைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே முதல்வராக உள்ளார். பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக உள்ளார். தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவரான அஜித் பவாரும் தற்போது துணை முதல்வராகப் பதவியேற்றதால் இம்மாநிலத்தில் 2 துணை முதல்வர்கள் உள்ளனர்.
தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த கான்ராட் சங்மா முதல்வராக இருக்கும் நிலையில், பிரஸ்டோன் டைன்சாங் மற்றும் ஸ்னியாவ்பலாங் தார் ஆகியோர் துணை முதல்வர்களாக உள்ளனர்.
என்டிபிபி கட்சியைச் சேர்ந்த நெய்பியூ ரியோ முதல்வராகத் தொடரும் நிலையில், துணை முதல்வர்களாக என்டிபிபி மூத்த தலைவர் ஜெலியாங், பாஜக மூத்த தலைவர் யான்தன்கோ பேடன் ஆகியோர் உள்ளனர்.
மிசோரம் தேசிய முன்னணி கட்சியைச் சேர்ந்த் ஜோரம்தங்கா முதல்வராக உள்ள நிலையில், டவ்ன்லூயாவு துணை முதல்வராக உள்ளார்.
பாஜகவைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத் முதல்வராக இருக்கும் நிலையில், கேசவ் பிரசாத் மயூரா மற்றும் பிரஜேஷ் பதாக் ஆகியோர் துணை முதல்வர்களாக உள்ளனர்.
காங்கிரஸைச் சேர்ந்த சித்தராமையா முதல்வராகவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் உள்ளார்.