இந்நிலையில் தற்போது அதற்கான வழிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை பிரிவு வெளியிட்டு, அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், கொரோனாவால் உயிரிழந்ததாக சான்றளிக்கப்பட்டிருந்தால் அவரது குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து மட்டுமே நிதி வழங்க வேண்டும் எனவும், கொரோனா பரவிய நாளில் இருந்து மறு அறிவிப்பு வரும் வரை உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நிதியுதவி தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது.