அதில், தமிழக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், செம்மலை, செல்லூர் ராஜூ, பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த பேச்சுவார்த்தையில் 3கட்சிகளுக்கும் இடையே எந்த முடிவும் எட்டப்படாமல் இழுபறி நீடித்தது.