கோவை பந்தய சாலையில் உள்ள விமானப்படை பயிற்சி மையத்தில் கடந்த 10ஆம் தேதி சக அதிகாரியான அமிதேஷ் என்பவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் அதிகாரி ஒருவர் விமானப்படை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இதில் நடவடிக்கை எடுக்க தாமதமானதாக கூறப்படும் நிலையில், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி கோவை காவல் துறையிடம் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காந்திபுரம் அனைத்து மகளிர் போலீசார், விமானப்படை அதிகாரி அமிதேஷை கைது செய்தனர்.