’எதற்கும் துணிந்தவன்’ படப்பிடிப்பில் சூர்யாவுக்கு ஓவியத்தை பரிசாக வழங்கிய ரசிகர்கள்

’எதற்கும் துணிந்தவன்’ படப்பிடிப்பில் சூர்யாவுக்கு ஓவியத்தை பரிசாக வழங்கிய ரசிகர்கள்
’எதற்கும் துணிந்தவன்’ படப்பிடிப்பில் சூர்யாவுக்கு ஓவியத்தை பரிசாக வழங்கிய ரசிகர்கள்

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படப்பிடிப்பில் சூர்யாவை சந்தித்து ரசிகர்கள் ஓவியத்தைப் பரிசாக வழங்கியுள்ளனர். சந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

'சூரரைப் போற்று’ பட வெற்றிக்குப் பிறகு நடிகர் சூர்யா, இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ’எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகனும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ், ராஜ்கிரண், நடிகை ராதிகா உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இமான் இசையமைக்கிறார். காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 51 நாட்கள் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்ததையடுத்து தற்போது தென்காசியில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சூர்யா ரசிகர்கள் ‘எதற்கும் துணிந்தவன்’ படப்பிடிப்புக்குச் சென்று சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ புகைப்படத்தை ஓவியமாக அளித்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். சூர்யாவும் அன்புடன் அதனைப் பெற்றுக்கொண்டுள்ளார். சூர்யா, இயக்குநர் பாண்டிராஜ், நடிகர் நட்ராஜ் உள்ளிட்டோருடனும் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com